Thursday, May 24, 2012

பெண்

நட்பை  நாடகமாக்கி
 உறவை  எருவாக்கி
 உணர்வை  உரைபனியாக்கி
நிகழ்வுகளை நித்தியத்தில் சேர்ப்பாள் --பெண் --              

Saturday, January 7, 2012

ஸ்பரிசத்தில். !

பேசும் விழிகளின் நாணச் சாய்ப்பில்
உறைந்து போனேன்
அபூர்வமாய் நாணம் மீறிய
மோகப் பார்வையில் கரைந்து போனேன் !

எழுதிய விழிகள்
எத்தனை கதை சொல்லும் -அதன்
ஈர்ப்பில் உள் விழுந்து
ஆழத்தில் .. இன்னும் ஆழத்தில்...
யாரும் அறியா ஆழத்தில்....
மூச்சையுற்று நிற்கதியாய்
மரிப்பின் மௌனத்தில் இருக்கையில்
திருத்திய செவ்விதழ்களின்
ஸ்பரிசத்தில் உயிர்ப்பாகி
மரணமும் ஜனனமுமாய் ...
முடிவில்லா காதலில்.
முடிக்கவும் தெம்பில்லை.
*********

துரத்தும் நினைவுகள்
திரும்பாத காலங்கள்
மாற்றி எழுதும் வேட்கை
மறுபடியும் பிறக்க வேண்டும் ..
**********

எங்கோ ஏகாந்தத்தில்
எதிரெதிரே இருவரும்.
எதையோ வெறித்திருக்கும்
மௌனத்தின் உரசலில்
நெருப்பின் ஜ்வாலை..
உடைக்க மனமில்லை
**********