Friday, November 11, 2011

சின்னதாய் சில கிறுக்கல்ஸ் !!

பௌர்ணமி வெளிச்சம் .. கருநிற இரவு மறையும் நேரம் .. மௌனம் தழுவிய என் முகம் ...எங்கோ ஏகாந்தத்தில் இருவரும் புனகைத்த பிம்பம் ...நிலவைப் பார்த்து கண்ணீரை கசிந்தேன் மனக்கசப்பில் ......சட்டென்று மழை ....அது மழை அல்ல அவளின் கண்ணீர் துளி ....

"ஒரு கணம் உன் வாழ்வில் உன் தேவதை உன் மனதை வதை புரிய செய்வாள் ...அவள் ஸ்பரிசங்கள் சலனமாகும் .....சிதைத்து விடு சிந்திய கண்ணீரை ... காணல் நீராய் கரையட்டும் காற்றிலே ...."

விரக்தியில் விழிகள் விரிய மறுக்கின்றன விடியும் வேலையில் ....... அதே விரக்திதான் என் விழியை மூட தடை செய்கிறது இரவு வேலையில் ......தூக்கம் தொலைவில் ......

பின்னிப் பிணைந்த ஒரு காவியம் பெண்மை ..இரு துருவம் சேர்ந்த ஒரு காவியம் காதல் ..காதல் உரசல் அல்ல உரசல் தான் காதல் ..உரசல் நட்பும் அல்ல ...உரசலை மறந்து அன்பை கொணர்வது நட்பு. உரசலை தேடாதே நட்பு மறைந்துவிடும் நட்பை தேடு .....

என் உணர்வை தழுவிய பிம்பங்கள் மறையும் காலம் தூரமில்லை .......என்னுள் உறைவது நான் மட்டும் தான் ...மகிழ்ச்சி எமக்கு !!

No comments:

Post a Comment